கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவை:  கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம்  பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் அருண்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர்.  

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ  750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe