கோவை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்..

published 2 days ago

கோவை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்..

கோவை: கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றப்பட்டுள்ளனர். 

 

பேரூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கோவை மாவட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகன், பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ்  இன்ஸ்பெக்டரகவும், பொள்ளாச்சி கிழக்கு பகுதி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ரத்தினகுமார் கோவை மாவட்டம் பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வடிவேல் குமார் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டரகவும், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டராகவும்,  கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முத்துப்பாண்டி, ஆனைமலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று டிஐஜி பிறப்பித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe