உடல் பருமன் சிகிச்சை: இளைஞர் பரிதாப பலி! அமைச்சர் உறுதி!

published 10 months ago

உடல் பருமன் சிகிச்சை: இளைஞர் பரிதாப பலி! அமைச்சர் உறுதி!

உடல் பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் சென்னையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த வானவில் நகரைச் சேர்ந்தவர் துரைசெல்வம். இவர் அம்மாநில கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராக உள்ளார்.

இவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 26) பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.

அதிக உடல் எடையுடன் இருந்த இவர் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று வந்தார். தொடர்ந்து அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது, அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களிலேயே ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனிடையே தவறான சிகிச்சையால் தான் இளைஞர் உயிரிழந்து விட்டதாக ஹேமச்சந்திரனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே உடல் பருமன் சிகிச்சையால் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago