கோவை ரயில் நிலையத்தில் பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்- ஒருவர் கைது...

published 1 day ago

கோவை ரயில் நிலையத்தில் பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்- ஒருவர் கைது...

கோவை: கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில்,16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

கோவை ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்ததும்,  சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை திறந்து சோதனையிட்டதில், 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும்.

தொடர்ந்து அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கைதான நபர் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த காளிந்தி ஸ்வைன் (35) என்பது தெரியவந்தது. 

அவரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் இளம்வழுதி, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago