கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது தமாரா ஹோட்டல்!

published 6 months ago

கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது தமாரா ஹோட்டல்!

கும்பகோணம்: தமாரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டின்  கோவில்நகரமான கும்பகோணத்தில் பிரமாண்டமான ஹோட்டலை தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தமாராவின் 3வது ஹோட்டல் இது. கும்பகோணம் விருந்தினர்களுக்கு அமைதியான மற்றும் கலாச்சார ரீதியான அமைப்புடன் கூடிய சூழலை இந்த ஹோட்டல் விருந்தினர்களுக்கு வழங்குகிறது.

இந்த புதிய ஹோட்டலை தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இயக்குநருமான ஸ்ருதி ஷிபுலால் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், அதைத் தொடர்ந்து ஹோட்டல் மேலாளர் வி.உன்னிகிருஷ்ணன் ஹோட்டலின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

வெளியீட்டு விழாவில், தாமரா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ருதி ஷிபுலால் கூறுகையில், "ஒரு குழுவாக, நாங்கள் இந்தியாவில் பயணச் சந்தையைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம். குறிப்பாக தென் இந்தியாவில் மேலும் பல புதிய ஹோட்டல்களை  தொடங்குவதற்கான முதலீடு செய்துள்ளோம்.

கும்பகோணத்தில் எங்கள் லிலாக் ஹோட்டலானது அனைத்து தரப்பு மக்களும் அணுகும் வகையில் கோவில் தலங்கள் மற்றும் வரலாற்றுத் தலங்களுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் குழுக்களுக்கு ஏற்றதாக இது அமையும்.  இதன்மூலம் தமிழ்நாட்டில் தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸின் மூன்றாவது மற்றும் மற்றும் இந்தியாவில் ஒன்பதாவது ஹோட்டல் ஆகும்." என்றார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago