கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்- அடுத்த கட்ட ஆர்ப்பாட்டம் குறித்து அறிவித்த அமைப்பினர்...

published 3 weeks ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்- அடுத்த கட்ட ஆர்ப்பாட்டம் குறித்து அறிவித்த அமைப்பினர்...

கோவை: தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கோவை மாவட்டத்தை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

 

 நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஜியோ இணைப்பு சங்கங்கள் உள்ளிட்டவற்றை சார்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  பள்ளிக்கல்வித்துறை அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,  ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும், பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணிகளை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

21 மாத கால ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் வருகின்ற 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago