கோவையில் சாமியார் தங்கி இருந்த வீட்டின் மீது வெடிபொருள் வீச்சு

published 2 years ago

கோவையில் சாமியார் தங்கி இருந்த வீட்டின் மீது வெடிபொருள் வீச்சு

கோவை:  கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஒசூர் சங்கராபீடம், சுவாமி சவுபர்நிக்கா சங்கர விஜயேந்திரபுரி (வயது 41).  அவர் நவக்கரை பகுதியில் புதிய மடம் ஒன்றை கட்டும் பணியை தொடங்க உள்ளார். 

அதற்காக  இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை நவக்கரை பகுதிக்கு வந்தார்.  அவருக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் தங்கியுள்ள வீட்டின் முன்பு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கார் மீது 2 வெடி பொருளை வீசிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சாமியார் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தனர்.

 

இதை அடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த வெடி பெருள் நிபுணர்கள் மற்றும் க.க.சாவடி போலீசர் அந்த மர்ம பொருளை கைபற்றி சோதனை செய்தனர் அதில் அந்த வெடி பொருள் சாதாரண பட்டாசு தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பட்டாசுகளை கைப்பற்றி நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில்  புதைத்தனர். 

 

மேலும் இந்த பட்டாசுகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe