பொள்ளாச்சியில் மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் கரூரில் மீட்பு

published 2 years ago

பொள்ளாச்சியில் மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் கரூரில் மீட்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குப்பையாண்டி பிள்ளை புதூரை சேர்ந்தவர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் விகாசினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 15. இந்திரா நகரைச் சேர்ந்த இந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது மகள் ஐஷ்வர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 15.

இவர்கள் இருவ்ரும் பொள்ளாச்சியிலுள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு வழக்கம் போலப் புறப்பட்டுச் சென்றனர். மாலையில் இவர்களின் தந்தைகள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகப் பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளியில் இல்லை.

இது குறித்து அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவிகள் கரூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் உடனடியாக கரூருக்கு விரைந்து சென்று 2 மாணவிகளையும் மீட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe