கோவையில் கத்தி முனையில் டாக்ஸி டிரைவரிம் பணம் பறிப்பு

published 1 year ago

கோவையில் கத்தி முனையில் டாக்ஸி டிரைவரிம் பணம் பறிப்பு

கோவை :

கோவையில் கத்தி முனையில் மிரட்டி டாக்ஸி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் ராஜூ(47). கால் டாக்ஸி டிரைவர். இவர் நேற்று வெள்ளலூர் மூலக்கடையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

 அப்போது எதிரே வந்த 2 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை மிரட்டி ராஜூவிடம் இருந்த ரூ. 300ஐ பறித்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜூ இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்தது வெள்ளலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் மதன்குமார்(25), போத்தனூர் காமராஜபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மூவேந்திரன்(25) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளலூர் பகுதியில் பேக்கரியை சூறையாடி கேஷியரை அரிவாளால் வெட்டியதாக இவர்கள் இருவர் மீதும் போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe