கோவையில் செவிலியர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

published 1 year ago

கோவையில் செவிலியர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

கோவை: தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கோவையில்  செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக  நடைபெற்ற  தூய்மை இந்தியா விழிப்புணர்வு . பேரணியை கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சரவணன் துவக்கி வைத்தார்.

இதில் பி.பி.ஜி.செவிலியர்   கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம்,எரிபொருள் சிக்கனம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

பேரணி கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பாக  துவங்கி வ.ஊ.சி.மைதானத்தை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் தூய்மை இந்தியாவை ஆதரிப்போம்,செழுமையுடன் வாழ்வோம்  உள்ளிட்ட முழக்கங்களோடு ஊர்வலமாக சென்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe