வடவள்ளியில் சாலையோர கடைக்குள் புகுந்த கார் 3 பேர் காயம்.

published 1 year ago

வடவள்ளியில் சாலையோர கடைக்குள் புகுந்த கார் 3 பேர் காயம்.

கோவை :வடவள்ளியில் கார் கட்டுப்பாட்டை  இழந்து சந்தை கடையில் புகுந்த விபத்தில், மூவர் காயமடைந்தனர்.வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், பேருந்து நிலையம் அருகில், வரா சந்தை நடக்கும்.

வடவள்ளி  இடையர்பாளையம் சாலையின், இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். நேற்று வடவள்ளி உழவர் சந்தையின் பிரதான நுழைவாயில் எதிரில், சாலையில் சென்ற கார் திடீரென, சாலையோரத்திலிருந்த கடைகளில் புகுந்தது. இதில், காய்கறி வாங்க வந்திருந்த ஒரு மூதாட்டி, 2 வடமாநிலத்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடவள்ளி காவல்துறை நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் லிங்கனூரை சேர்ந்த கனிராஜ்,57 என்பது தெரியவந்தது. அவர் தற்போதுதான், கார் ஓட்டிப்பழகுவதும், அதனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe