கோவையில் நகை வாங்குவது போல் நடித்து நகை, பணம் திருடிய இளம் பெண்

published 1 year ago

கோவையில் நகை வாங்குவது போல் நடித்து நகை, பணம் திருடிய இளம் பெண்

கோவை:  கோவை காட்டூரில் உள்ள ஜூவல்லரியில் நகை வாங்குவது போல் நடித்து நகை, பணம் திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மதியம் இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் கடை ஊழியரிடம் தங்க செயின் வாங்க வேண்டும் என்று தெரிவித்தார். உடனே ஊழியரும் ஒவ்வொரு மாடலாக தங்க செயின்களை எடுத்து காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அந்த இளம்பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 3 பவுன் நகை மற்றும் கல்லாவில் இருந்த ரூ. 75 ஆயிரத்தை நைசாக திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

அவர் சென்ற பின்பு நகை மற்றும் பணம் திருடு போயிருப்பதை கண்டு கடை ஊழியர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில், நகைக்கடையில் நகை மற்றும் பணம் திருடியது பல்லடம் சாமளாபுரம் செந்தோட்டத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி டயானா கிறிஸ்டி(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe