கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரிகளை மிரட்டிக் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரிகளை மிரட்டிக் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது

கோவை  : கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அப்பாஸ் (28), காய்கறி வியாபாரி. இவர் நேற்று கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்தார். 

பின்னர் அவரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அப்பாசைக் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பாஸ் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், கத்தி முனையில் பணம் பறித்தது குனியமுத்தூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், காரைக்குடியைச் சேர்ந்தவர் சிவா (34). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி தள்ளுவண்டியில் பெல்ட் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று சிவா சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே ஆவின் டீக்கடை முன்பு தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.260 ஐ பறித்துத் தப்பினார். 

இதுகுறித்து சிவா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கத்தி முனையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த சிங்காநல்லூர் காமாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெயிண்டர் சிவக்குமார் (45) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe