கோவை மக்களே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா..? இதோ புகார் எண்

published 1 year ago

கோவை மக்களே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா..? இதோ புகார் எண்

கோவை: பண்டிகை காலங்களில் கோவையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர் திரும்பும் போது அதிக பேருந்து கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள், கூடுதல் கட்டணம் மற்றும் பிற குறைபாடுகள் காரணமாக பல இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். 

அதனை நீக்கும் வகையில் ஆம்னி பேருந்துகளின் முறையற்ற இயக்கம், கூடுதல் கட்டணம் மற்றும் பிற இனங்களில் புகார்கள் ஏதும் இருப்பின் 9384808304 என்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார்தாரர் பெயர், தொலைபேசி எண், பயணம் செய்யும் தேதி, செல்லும் இடம், டிக்கெட்டின் புகைப்படம் கட்டண விவரம், பேருந்து எண் மற்றும் பெயர் ஆகிய விவரங்களுடன் புகார் தெரிவித்து உரிய தீர்வு பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe