கணவருடன் நடந்து சென்ற இளம்பெண் மீது தாக்குதல்- அண்ணன் தம்பி கைது...

published 3 days ago

கணவருடன் நடந்து சென்ற இளம்பெண் மீது தாக்குதல்- அண்ணன் தம்பி கைது...

கோவை: கோவையில் கணவருடன் நடந்து சென்ற இளம்பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை அடுத்த துடியலூர் அருகே உள்ள வெற்றிகாளைபாளையத்தை சேர்ந்தவர் கோபி(28). இவரது மனைவி காயத்ரி(25). கோபிக்கும் ராக்கிபாளையம் பிள்ளையார் கோயிலை சேர்ந்த சரவணன்(20), அவரது அண்ணன் ராமகிருஷ்ணன்(23) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்தது. 

அடிக்கடி மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டருகே காயத்ரி, கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் கோபியிடம் தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் கோபி மற்றும் காயத்ரியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். 

இது குறித்து கோபி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தாக்குதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களான சரவணன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe