முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம் நடத்திய ஏஐடியுசி அமைப்பினர்…

published 1 year ago

முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம் நடத்திய ஏஐடியுசி அமைப்பினர்…

கோவை: தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தமிழ்நாடு ஏஐடியுசி அமைப்பினர் கோவை பழைய தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மேற்கொண்டனர். முன்னதாக அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe