கோவையில் இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து பார்த்து ரசித்த கேரளாவைச் சேர்ந்தவர் கைது…

published 1 year ago

கோவையில் இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து பார்த்து ரசித்த கேரளாவைச் சேர்ந்தவர் கைது…

கோவை: கோவை ராம்நகரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அருகே உள்ள வீட்டில் வசிக்கும் அபிலாஷ் (வயது 41) என்பவர் இளம்பெண் குளிப்பதை மறைந்து இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். உடனடியாக அபிலாஷ் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து இளம்பெண் அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அபிலாஷின் வீட்டிற்கு சென்று அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

அப்போது தெரியாமல் நடந்து விட்டது. மன்னித்து விடுங்கள் என கூறினார். ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கைதான அபிலாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மத்திய புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe