உக்கடம் செல்லும் பேருந்தில் பிக்பாக்கெட்....

published 1 year ago

உக்கடம் செல்லும் பேருந்தில் பிக்பாக்கெட்....

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஹரீஸ் கண்ணன்(24). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது நண்பர் செந்தில்குமார் என்பவருடன் காந்திபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்திய 2 வாலிபர்கள் ஹரீஸ் கண்ணன் பாக்கெட்டில் இருந்த ரூ. 500ஐ திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றனர். 

இதனைப்பார்த்து சுதாரித்த ஹரீஸ் கண்ணன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் பிக்பாக்கெட் அடித்தது கோவை காந்திபார்க் பொன்னையராஜ புரத்தை சேர்ந்த மணிகண்டன்(24), பொள்ளாச்சியை சேர்ந்த பிரகாஷ்(32) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe