வெள்ளலூர் மக்களே கொஞ்ச நாளைக்கு சிங்காநல்லூர் வழியா போய்க்கலாம்..

published 1 year ago

வெள்ளலூர் மக்களே கொஞ்ச நாளைக்கு சிங்காநல்லூர் வழியா போய்க்கலாம்..

கோவை: வெள்ளலூர் உயர் மட்டபால பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஒரு சில தினங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மேம்பால பணிகள் நடைபெறும் வழியாக செல்லாமல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். 2 கிலோ மீட்டர் செல்லும் தொலைவை பல கிலோ மீட்டர்கள் பயணிந்து சென்று வந்தனர்.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் வெள்ளலூர் சிங்காநல்லூர் சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. விரைவில் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை முடிக்க  வேண்டும் என்று வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மேம்பாலம் கட்டும் வழியாக அடுத்த ஒரு சில தினங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று திரும்பும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மேம்பாலம் முழுமை பெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த செய்தியை வெள்ளலூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe