எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 209 மது பாட்டில்கள் திருட்டு

published 2 weeks ago

எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 209 மது பாட்டில்கள் திருட்டு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: கோவை: சின்னியம்பாளையம் ரோடு மாணிக்கம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவர் கோவை கணபதி நகர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் தங்கி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.


எனவே டாஸ்மாக் கடை கடந்த 16ம் தேதி இரவு முதல் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த சிலர் டாஸ்மாக் சூப்பர்வைசர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு சென்ற செந்தில் குமார் கடையின் இருப்பை சரி பார்த்தார். அப்போது அங்கு ரூ.56,790 மதிப்பிலான 209 மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது.


மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் திருடியவரை தேடி வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw