ஜனநாயக தீர்ப்பு எப்போது தெரியும்?: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

published 8 months ago

ஜனநாயக தீர்ப்பு எப்போது தெரியும்?: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

கோவை: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக தபால் வாக்குகளை என்னும் பணி அனைத்து  நடைபெற்று வருகிறது.

கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை 12 மணி அளவில் எந்த கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதை நாம் யூகிக்க முடியும். மாலை 4 மணிக்கு மேல் வெற்றி பெறப்போகும் கட்சி எது என்பதை நாம் கணிக்க முடியும்.

நமது நியூஸ் க்ளவுட்ஸ் தளத்தில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். ஒவ்வொரு செய்திக்கு கீழேயும் இந்த விவரத்தை வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.

தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளின் நிலவரம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு என்ற தலைப்பில் வழங்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe