கோவை அருகே கிணற்றுக்குள் விழுந்த மானை மீட்ட தீயணைப்பு துறையினர்...

published 7 months ago

கோவை அருகே கிணற்றுக்குள் விழுந்த மானை மீட்ட தீயணைப்பு துறையினர்...

கோவை: கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம், சிப்ஸ் கம்பெனிக்கு அருகில் சுமார் 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளி மான் விழுந்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

 வனத்துறையினர் உடனடியாக சென்று பார்த்த போது ஹைவேக்கு சொந்தமான  சுமார் 150 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சுமார்  1 வயது பெண் புள்ளி மான் ஒன்று உள்ளே விழுந்தது கிடந்தது உறுதி செய்தனர்.  பின்னர் மதுக்கரை வன அலுவலர் தலைமையில் கரடிமடை பிரிவு வனப் பணியளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நீண்ட போராட்டத்திற்கு பின் கிணற்றில் விழுந்த புள்ளி மானை நல்ல நிலையில் மீட்கப்பட்டனர்.

பின்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மானானது கரடிமடை வன பகுதியில் உள்ள காப்பு கட்டில் விடுவிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe