கணபதி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்ட கோவை எம்பி.

published 7 months ago

கணபதி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த  ஆய்வு மேற்கொண்ட கோவை எம்பி.

கோவை: கோவை - கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கோவையின் முக்கிய சாலைகளுள் ஒன்று சத்தி சாலை. இங்கு கணபதி பகுதிதில் உள்ள சாலை குறுகலாக உள்ளதால் தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதன் இடையே இந்த சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த 2020 ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நிலமெடுப்பதற்கு, நகர ஊரமைப்புத் துறையிடம் இருந்து, அதாவது அப்போது இருந்த உள்ளூர் திட்டக் குழுமத்திடம் நிதியைப் பெற தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்தும் கணபதி வேலன் தியேட்டரில் இருந்து, சூர்யா மருத்துவமனை வரை, இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்ய மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 151 பேரிடம் இருந்து 73,250 சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டுமென்று கணக்கிடப்பட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு, ரூ.38 கோடியே 64 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து, கடந்த 2021 ல் அரசாணை வெளியிட்டது. ஆனால், அந்த பணி முழுவதும் கிடப்பில் போடப்பட்டது. 

இதனிடையே  கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர், கோவை தொகுதி எம்.பி கணபதி ராஜ்குமார் ஆகியோர் கணபதி பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு நடத்திச் சென்று உள்ள அதிகாரிகள் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe