கேரள அரசை கண்டித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

published 7 months ago

கேரள அரசை கண்டித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

கோவை: கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவர்களது நல வாரியம கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்ட தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்,

கோவையில் குடிநீர் ஆதாரமாக உள்ளது சிறுவாணி அணை. கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த அணை உள்ளது. இந்த அணையில் 50 அடி வரை நீரை தேக்கலாம், ஆனால் 5 அடி குறைவாக சேமிப்பதால் 19 சதவீதம் குடிநீர் இல்லாமல் போகிறது. எனவே கேரள அரசை கண்டிக்கின்றோம்.

கேரளா அரசு அணையின் பாதுகாப்பை காட்டி நீரை  வெளியேற்று கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம், திமுக அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். முழுமையாக தேக்கினால்  1 வருடத்திற்கு குடிநீர் பிரச்சனை இருக்காது.50 அடி உயரத்துக்கு நீரை நிரப்ப வேண்டும்.

மழையின் போது நொய்யல் ஆறு உள்ளிட்டவைகளில் வரும் நீரை குளத்தில் சேமிக்க வேண்டும். ஆனால் குளத்திற்கு நீர் வருகின்ற நீர்வழி பாதையை அடைத்துள்ளனர்.இதனால் அந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது.

தமிழக அரசு கேரளா அரசு உடன் தொடர்பு கொண்டு நீரை தேக்க வேண்டும்.சிறுவாணி அணை தூறுவார வேண்டும், திமுக வந்து 3 வருடம் ஆகிறது, அதையும் இன்னும் நிறைவேற்றவில்லை,

சிறுவாணி  அணை கோவைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளதால் 50 அடிக்கு நீரை தேக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe