கோவையில் நடு ரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் கத்தியுடன் மோதல்! பரபரப்பு வீடியோ உள்ளே...

published 5 months ago

கோவையில் நடு ரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் கத்தியுடன் மோதல்! பரபரப்பு வீடியோ உள்ளே...

கோவை: கோவையில் பட்டப்பகலில் நடு ரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் கத்தியுடன் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை நடு ரோட்டில் 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

அதில் அவர்கள் கற்களை எடுத்து வீசியும், கத்தியால் துரத்தியும் அட்டகாசம் செய்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த மோதலில் கத்தியால் குத்தியதில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கதிரேசன்(35) மற்றும் உதய சூரியன்(30) என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருவருக்கும் அடிக்கடி ஆட்டோ சவாரி எடுப்பதில் தகராறு இருந்து வந்தது.

இதேபோல், நேற்று ஏற்பட்ட தகராறில் இருவரும் மோதலில் ஈடுபட்டதும், கதிரேசன் கத்தியால் குத்தியதில் உதயசூரியனுக்கு காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து காயமடைந்த உதயசூரியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரேசனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/C_zVP8egpuE/?igsh=MXE1YWR4NGFyeWpkaw==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe