காரமடை வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது

published 2 years ago

காரமடை வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது

 

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தில் சந்தன மரத்தினை வெட்டி கடத்த முயற்சி செய்த 3 பேரைக் கைது செய்து வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் வனத்துறையினர் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியைச் சேர்ந்த காளி மகன் முருகேசன் (35), ரங்கசாமி மகன் வீரையன் (எ) காளிமுத்து, சுப்பிரமணி மகன் ஆனந்தகுமார் (42), சொரண்டி பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் சஞ்சித் (21) ஆகிய 4 பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வீரையன் (எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe