உலக புற்றுநோய் ரோஸ் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு

published 2 years ago

உலக புற்றுநோய் ரோஸ் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்  விழிப்புணா்வு

 

கோவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி மெலிண்டா ரோஸ் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 22-ஆம் தேதி உலக புற்றுநோய் ரோஸ் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக புற்றுநோய் ரோஸ் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மண்டல புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தலைமை வகித்தார்.  இதில் புற்றுநோய் பாதிப்புகள், முன்கூட்டியே கண்டறியும் வழிமுறைகள், புற்றுநோய் பாதிப்புகளுக்கான சிகிச்சைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கும் வழிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

கோவை அரசு மருத்துவமனையின் மண்டல புற்றுநோய் மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளுக்கு ரோஸ் மலரை வழங்கி அன்பினை மருத்துவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மண்டல புற்றுநோய் மைய மருத்துவர்கள் சுரேஷ் வெங்கடாசலம், அகிலா, மதுமதி, கோவை இன்னர்வீல் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe