மது குடிக்க பணம் தர மறுத்த நண்பருக்கு கத்தி குத்து.!

published 2 years ago

மது குடிக்க பணம் தர மறுத்த நண்பருக்கு கத்தி குத்து.!

கோவை: கோவை சிட்கோ அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் அந்தோணி நிக்சன் (வயது 26). டிரைவர். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கமலக்கண்ணன் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

அந்தோணி நிக்சன் தனது நண்பர் குணசீலன் என்பவருடன் குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கமலக்கண்ணன் மது குடிக்க ரூ.200 பணம் கொடுக்கும்படி கேட்டார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அந்தோணி நிக்சன் முகத்தில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

கத்திக்குத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe