கோவையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பரிதாப பலி

published 2 years ago

கோவையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பரிதாப பலி

கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியை சேர்ந்தவர் குமார் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவை சூலூர் எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் தங்கி உள்ளார்.

இவரது மகன் வெற்றிவேல் (16). இவர் செஞ்சேரிமலையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்தார். அப்போது மின்சார தடை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் வெற்றிவேல் வீட்டில் உள்ள யூ.பி.எஸ்சை போடுவதற்காக அறைக்கு சென்றார்.

அங்கு யூ.பி.எஸ். சுட்சை போட்டார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அவரின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர்  ஓடி வந்து பார்த்தனர். அறையில் வெற்றிவேல் மயங்கி கிடந்ததை கண்டு   குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெற்றிவேலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதைகேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe