அன்னூரில் ஆட்டோவில் குழந்தை பெற்ற பெண்..!

published 2 years ago

அன்னூரில் ஆட்டோவில் குழந்தை பெற்ற பெண்..!

கோவை: கோவை மாவட்டம் கெம்மநாயக்கன்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்- மணிமேகலை தம்பதியினர் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மணிமேகலைக்கு திடீரென நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அன்னூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவிக்கு ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் மணிமேகலைக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அருகிலிருந்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது திடீரென மருத்துவமனை செல்லும் வழியிலேயே மணிமேகலைக்கு குழந்தை பிறந்தது. இதனையடுத்து அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe