குடிபோதையில் செல்போன் பேசி கொண்டே முதல் மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

published 2 years ago

குடிபோதையில் செல்போன் பேசி கொண்டே முதல் மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரதிபா மாலிக் (வயது 31). இவர் கோவை பேரூர் பச்சபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று  பிரதிபா மாலிக் குடிபோதையில்  வீட்டின் முதல் மாடியில் மதில் சுவர் மீது அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பிரதிபா மாலிக் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தார்.
இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
அங்கு பிரதிபா மாலிக்கை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe