கோவையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

published 3 hours ago

கோவையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

கோவை: கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவரது கணவர் இறந்து விட்டார்.

பிள்ளைகள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இவரது வீட்டருகே வசிப்பவர் மணிகண்டன்(40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக மணிகண்டனை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டார்.

இந்நிலையில், மணிகண்டனும், மூதாட்டியும் பக்கத்து வீடு என்பதால் மணிகண்டன் சிறு, சிறு உதவிகளை அவ்வப்போது மூதாட்டிக்கு செய்து வந்தார். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டில் பல்பு பீஸ் போனது.

இதனைத் தொடர்ந்து மூதாட்டி வேறு ஒரு பல்பை வாங்கினார். ஆனால் அவரால் அந்த பல்பை மாட்ட முடியவில்லை. இதனால் கடந்த 22ம் தேதி இரவில் மணிகண்டனை அழைத்து பல்பை மாட்டித் தருமாறு கேட்டார்.

வீட்டுக்கு சென்ற மணிகண்டன் பல்பை மாட்டினார். பின்னர் சபலம் ஏற்பட்டு மூதாட்டியின் கைகளை கயிற்றால் கட்டினார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி விட்டுச்சென்றார்.

இந்த விஷயத்தை மூதாட்டி வெளியே சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து மூதாட்டிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பயந்து போன மூதாட்டி இரவில் தனது வீட்டில் படுக்காமல் அருகே உள்ள கோயிலுக்கு சென்று படுத்துக்கொண்டார்.

இதுகுறித்து சிலர் மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது மூதாட்டி மணிகண்டன் தன்னிடம் நடந்த விதத்தைக்கூறி அழுதுள்ளார்.

இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe