கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை: குடும்ப பிரச்சினை காரணமா என்று விசாரணை

published 2 years ago

கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை: குடும்ப பிரச்சினை காரணமா என்று விசாரணை

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: தூத்துக்குடி மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் தாமோதரன் (41). தற்போது மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி பிரேமிதா(13) என்ற மகளும், கார்த்திக்(8) என்ற மகனும் உள்ளனர். 

இவர் தற்போது  மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.வழக்கம் போல் பணி முடித்து வீட்டிற்குச் சென்ற அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து தலைமைக்காவலர் குடும்பப்பிரச்சினை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அலுவலக டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe