கோவை அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமி: போலீசில் புகார்

published 2 years ago

கோவை அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமி: போலீசில் புகார்

கோவை: கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவருக்கு அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்குத் தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகன், மகளுக்கு அறிவுரை வழங்கினார். சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல தங்களது பெற்றோரிடம் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஓட்டம் பிடித்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்குச் சென்ற தங்களது மகன், மகள் வீட்டிற்குத் திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது 2 பேரும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

இது குறித்து 2 பேருடைய பெற்றோரும் மாயமான தங்களது மகன், மகள் ஆகியோரை கண்டுபிடித்துத் தரும்படி கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியைத் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe