கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! 7 பேர் கைது

published 2 days ago

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! 7 பேர் கைது

கோவை: கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாயமானதாக அவரது பாட்டி உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர்.

இதனிடையே மறுநாள் சிறுமி வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.

சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட கல்லூரி மாணவர்கள் அவரை குனியமுத்தூரில், தாங்கள் தனியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் சென்றதும், அங்கு 7 மாணவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

முன்னதாக சிறுமி மாயமானதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர், அதனை போக்சோ வழக்காக மாற்றியுள்ளனர்.

இந்த வழக்கில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe