கோவை சிறை அருகே இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

published 1 year ago

கோவை சிறை அருகே இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவை மத்திய சிறை அருகே சிறைச்சாலை மைதானம் உள்ளது.  இங்குள்ள ஒரு மரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் பெங்களூர் மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

பட்டதாரியான அவர் வேலை தேடி கோவை வந்தபோது வேலை கிடைக்காத விரக்தியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் குறித்த தகவல்களையும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிறைச்சாலை மைதானத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe