கவுண்டம்பாளையம் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே தீக்குளிப்பு- நடந்தது என்ன?

published 2 days ago

கவுண்டம்பாளையம் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே தீக்குளிப்பு- நடந்தது என்ன?

கோவை: கவுண்டம்பாளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து தந்தை காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் மணி பரத் என்ற இரண்டு இளைஞர்கள் கையில் கஞ்சாவுடன் பிடிபட்டனர்.

இதை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவு உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து. கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தனது மகன் மணிபரத் மீது காவல் துறையினர் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது தந்தையான கவுண்டம்பாளையம் சிவாநகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து திடீரென தான் கையில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதை அடுத்து அங்கு இருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள சேகர் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகியாக உள்ளது குறிப்பிடத்தக்கது...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe