கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்

published 1 year ago

கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்

கோவை: கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணை தொட்டு பாலியல் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஒண்டிப்புதூர் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார்.

பின்னர் அந்த இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தொட்டு பாலியல் சில்மிஷம் செய்ய முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் மற்றும் அவரது கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டார்.

இதனால், அதிர்சியடைந்த தம்பதியினர், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe