கோவையில் 358 போதை மாத்திரைகள் பறிமுதல்.. 3 வாலிபர்கள் கைது

published 1 year ago

கோவையில் 358 போதை மாத்திரைகள் பறிமுதல்.. 3 வாலிபர்கள் கைது

கோவை: கோவையில் 358 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 வாலிபர்களை கைது செய்தனர்.

கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதைக்காக விற்பனை செய்ததும், அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தில் போதைக்காக பயன்படுத்தியதும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ரத்தினபுரி சிஎம் பழனி தெருவை சேர்ந்த ஷ்யாம்(28), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அன்வர் சாதிக்(28), மற்றும் கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சுல்தான் பாஷா(27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 358 போதை மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட 10 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe