மருதமலை கோவில் ஓவியம் மீது கரியை பூசிய மர்ம நபர்கள்..!

published 1 year ago

மருதமலை கோவில் ஓவியம் மீது கரியை பூசிய மர்ம நபர்கள்..!

கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் மேம்பாலங்களில் உள்ள தூண்கள், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கும் வகையில் வண்ண மையமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதில், கோவை அவினாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள ரவுண்டானா சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

அங்கு, மரக்கடை செல்லும் வழியில் உள்ள சுவர்களில் மருதமலை கோயில், முருகனின் ஓவியமும் வரையப்பட்டு இருந்தது. இந்த ஓவியத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கரியை பூசி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர், இந்துக்களின் மனதை வேதனைப்படுத்தும் வகையில் ஓவியத்தில் கரிபூசிய நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன் உள்பட பலர் வெரைட்டிஹால் ரோடு காவல்நிலையத்திற்கு சென்று மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று இரவே மாநகராட்சி நிர்வாகத்தினர் ஓவியத்தில் பூசிய கரி மீது வெள்ளை பெயிண்ட் அடித்து சீர் படுத்தினர்.

மேலும் ஓவியத்தின் மீது கரி பூசிய நபர்கள் யார் என்பது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe