நகை வாங்குவது போல் நடித்து பெரிய கடை வீதியில் நகை திருட்டு

published 1 year ago

நகை வாங்குவது போல் நடித்து பெரிய கடை வீதியில் நகை திருட்டு

கோவை: கோவை டிகே மார்க்கெட் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சாய்ராபானு(46). இவர் அதே பகுதியில் தங்க நகை பாலீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சாய்ராபானுவிடம் தங்க கம்மல் வேண்டும் என பேசி கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் பஞ்சலோகம் மட்டும் வாங்கி விட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. அவர்கள் சென்ற பின்னர் கடையில் இருந்த 3.650 கிராம் தங்க கம்மல் திருடு போயிருப்பதை கண்டு சாய்ராபானு அதிர்ச்சியடைந்தார். அவரது கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து சாய்ராபானு பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை வாங்குவது போல் நடித்து தங்க கம்மல் திருடிய 2 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe