கோவையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர்

published 1 year ago

கோவையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் மீனாட்சிபுரம் வீதி வண்டி காளியம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடந்தது.

கோவிலுக்கு திருவிழாவை காண அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தம் போட்டனர். இதனைக் கேட்ட அங்கு இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் வேட்டைக்காரன் புதூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. 

பொதுமக்கள் தாக்கியதில் பன்னீர் செல்வம் காயடைந்ததால் அவரை காவல் துறையினர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe