அன்னூர் அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபர் பலி

published 1 year ago

அன்னூர் அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபர் பலி

கோவை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நரேஷ் சிங் (வயது 25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார்.

அப்போது இருட்டில் 100 அடி ஆழ கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர். அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து அன்னூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe