கோவையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று

published 1 year ago

கோவையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று

கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருமல், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 381 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் கடந்த சில மாதங்களாக இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர்.

தற்போது பாதிப்பு காரணமாக 274 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe