தமிழகத்திலேயே முதல் முறையாக Dog Squad-ல் பெண்கள்..!

published 1 year ago

தமிழகத்திலேயே முதல் முறையாக Dog Squad-ல் பெண்கள்..!

தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநரில் காவல்துறையில் வில் இரண்டு பெண் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை துவங்கியுள்ளனர்.

கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழக்த்தில் சென்னை மற்றும் கோவை மட்டுமே துப்பரியும் நாய்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தற்போது 9 மோப்ப நாய்கள் உள்ளன. இதில் சிந்து என்ற நாய் பணி ஓய்வு பெற்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்தால், அப்பகுதிக்கு மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு, துப்பறியும் பணியை போலீசார் மேற்கொள்கிறார்கள். 
மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் 14 போலீசாருடன் இந்த பிரிவு இயங்குகி வருகிறது. இந்த பிரிவு தொடங்கப்பட்ட காலம் முதல் ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆதப்படை பிரிவில் பணியாற்றிய பொள்ளாச்சியை சேர்ந்த கவிப்பிரியா, தேனி மாவட்த்தை சேர்ந்த டபவானி ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
இவர்களுக்கு தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி எப்படி அளிப்பது? அவற்றுடன் பழகுவது எப்படி? உணவு எப்படி வழங்க வேண்டும்? என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே துப்பரியும் நாய்படை பிரிவில் முதல் பெண்களாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் இவர்கள், இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு மேலும் பெருமை சேர்ப்போம் என்று மிடுக்காக கூறுகின்றனர்.

இதுகுறித்து கவிப்பிரியா கூறியதாவது:

நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம்.  நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

கோவையில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்வதை பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பார்த்து உள்ளோம். அப்போது நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில் சேர வேண்டும் என்று எண்ணினோம்.


இதற்கிடையே தான் கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா  என்று கூறிஇருந்தார்.

இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறினோம். அதன்படி தற்போது மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு அதிகாரிகளின் சொல்லுக்கு கீழ்ப்படிதல், போதை பொருட்களை கண்டறிவது, கொலை, கொள்ளை சம்பவங்களில் துரத்திச்சென்று மோப்பம் பிடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறத.
இவ்வாறு அவர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe