ஜவுளி ஏற்றுமதி பங்களாதேஷ்க்கு அதிகரிக்க வாய்ப்பு

published 1 year ago

ஜவுளி ஏற்றுமதி பங்களாதேஷ்க்கு அதிகரிக்க வாய்ப்பு

கோவை: சீனா, இந்தியா, வியட்நாம் நாடுகளில் இருந்து பெருமளவில் நூல் மற்றும் துணிகள் பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து அதிக அளவிலான துணிகளை வாங்க பங்களாதேஷ் ஆர்வம் காட்டி வருகிறது. பங்களாதேஷினர் பருத்தி மற்றும் செயற்கைப் பஞ்சினால் தயாரிக்கப்படும் துணி வகைகளை தொடர்ச்சியாக வாங்க ஆர்வம் காட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஜவுளித்துறையினர் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும், பெற்றிருப்பதால், துணிகளின் ஏற்றுமதியை பங்களாதேஷ்க்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பஞ்சு மற்றும் செயற்கை பஞ்சு கலந்த பிளண்டட் ரகங்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

சீனாவில் உற்பத்தி செலவு அதிகரிப்பதினால், படிப்படியாக வாய்ப்புகள் பங்களாதேஷ்க்கு அதிகரிக்கும். தமிழகத்தின் துணி உற்பத்தி கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டு வருவதால், தரம் உயர்ந்த துணிகள் ரகங்கள் பங்களாதேஷின் ஏற்றுமதிக்கு உகந்ததாக உள்ளது" என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe