உக்கடத்தில் வாலிபருக்குக் கத்தி குத்து : தொழிலாளி கைது

published 1 year ago

உக்கடத்தில் வாலிபருக்குக் கத்தி குத்து : தொழிலாளி கைது

கோவை:  கோவை தெற்கு உக்கடம் எஸ்எச் காலணியைச் சேர்ந்தவர் ஹரீஷ்குமார்(27). 

தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளி மனோஜ்குமார்(23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று ஹரீஷ்குமார் பேரூர் பைபாஸ் ரோடு வனபத்திரகாளியம்மன் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த மனோஜ்குமாருக்கும், ஹரீஷ் குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

 இதில் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் தகாத வார்த்தைகளால் பேசி ஹரீஸ்குமாரை கத்தியால் குத்தினார்

. காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe