டெலிகிராம் குரூப்பில் இணைத்து பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி

published 1 year ago

டெலிகிராம் குரூப்பில் இணைத்து பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி

கோவை: டெலிகிராம் குரூப்பில் இணைத்து பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் லத்திகா லட்சுமி, 29. இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் டிரேடிங் செய்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதிநேர வேலையாக யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

 இதையடுத்து லத்திகா லட்சுமி அதில் குறிப்பிடப்பட்டிருந்த டெலிகிராம் குரூப்பில் இணைந்தார். பின் அவர் சிறிய அளவில் பணத்தை முதலீடு செய்து டாஸ்க் செய்து வந்தார்.

 அப்போது அவருக்கு ரூ.4000 லாபம் கிடைத்தது. தொடர்ந்து டெலிகிராம் குரூப்பில், அதிக அளவில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் பெறலாம், மேலும் வி.ஐ.பி., அக்கவுண்ட் மூலம் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் லாபம் வரும் என கூறப்பிடப்பட்டு இருந்தது. 

அதை நம்பி லத்திகா லட்சுமி பல்வேறு தவணைகளாக ரூ.22 லட்சத்தை முதலீடு செய்தார். அதன் பின் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. 

முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe