சரவணம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு!..

published 1 year ago

சரவணம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு!..

கோவை: கோவை அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோடு ஒய்.ஜி.எஸ் நகரை சேர்ந்தவர் வடிவேலு (46), தனியார் வங்கி மேலாளர். 

இவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். அவர்களது மகன் பள்ளிக்கு சென்று விட்டார்.

 இந்நிலையில், மாலையில் வேலை முடிந்து வடிவேலு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

 உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ஒரு கேமரா மற்றும் ரூ.500 ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் வீட்டில் பதிவாகியிருந்த ஒரு கைரேகையை போலீசார் கைப்பற்றினர். 

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe