கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி

published 1 year ago

கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் துவங்கிய இந்த மாரத்தான், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியை அடைந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கேரள டிஐஜி அஜீத்தா பேகம், சதீஷ் பினோ ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கேரள டிஐஜி அஜீத்தா பேகம், சதீஷ் பினோ  உட்பட காவல்துறை துணை ஆணையர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இதில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe